Sunday 23 October 2011

நரகாசுரன் கதை - அன்றும் இன்றும்


‘‘நீ காட்டுக்கு உள்ளேயே இருப்பவன். நாங்கள் நாடு பல கண்டவர்கள். உனக்கு உலகத் தைப் பற்றி ஒன்றும் தெரியாது. நாங்களோ உலக அறிவையெல்லாம் திரட்டி வைத்திருப்ப வர்கள். திரட்டிய அறிவுக்கேற்ப நாடு விரிவாக்க இந்தக் காடு வேண்டும். உன் ஆட்களின் எதிர்ப்பை சமாளிக்க நீ உதவினால் எம் பேரர சில் உனக்கும் ஒரு இடம் தருவோம். உதவ மறுத்தால் உன்னோடு போரிட்டு காட்டைக் கைப்பற்றுவோம்.”

“உங்களுக்கு உலக அறிவு இருக்கலாம். எனக்கு இந்தக் காடு பற்றியும், இதில் வாழும் என் மக்கள் உள்ளிட்ட அனைத்து உயிர்கள் பற்றியும் நன்றாகத் தெரியும். உலக அறிவை நாங்களும் கற்றுக்கொள்ள விடாமல் தடுத்த வர்களே நீங்கள்தானே... நாங்கள் அதையெல் லாம் பயில்வது பாவம் என்றீர். மீறிப் பயின் றால் எம் நாவை அறுக்கச் சொன்னீர். உங்கள் பாடத்தை நாங்கள் கேட்டுவிட்டாலோ செவியில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொன்னீர்...”

“அதை விடு. இப்போது காட்டை எம் மிடம் ஒப்படைப்பது பற்றி என்ன சொல் கிறாய்?”

“அது நடக்காது. எம் மக்கள் காடன்றி வேறெதையும் அறியமாட்டார். அவர்களைக் காடற்றவர்களாக விரட்டுவதற்கு ஒருபோதும் நான் உதவ மாட்டேன். உதவ மாட்டேன் என்பது மட்டுமல்ல, எதிர்த்துப் போராடவும் செய்வேன்...”

“நீ ஒரு அரக்கன்...”

“என் போன்றோரை அழிப்பதற்கு முன் நீங்கள் இந்தப் பெயரைத்தான் சூட்டுவீர்கள் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.”

மூண்டது போர். காடு பிடிக்க வந்தவர்களின் சார்பாக வந்தவன் தன்னுடைய ஆளுமை எக்காலத்திலும் பின்னுக்குத் தள்ளப்படக் கூடாது என்ற நிபந்தனையோடு அவர்களுக்கு உதவியவன். போரின் இறுதிக்கட்டத்தில்...

“உன் போன்ற வீரர்கள் எம்மோடு இருப் பதே பொருத்தம். இப்போதும் கூட நீ விட்டுக் கொடுத்தால் என் சக்ராயுதம் உன் மேல் பாயாது.”

“எம் மக்களைக் காட்டிக்கொடுத்து உயிர்ப் பிச்சையும் உயர் பதவியும் தேவையில்லை...”

“நீ அழியப்போவது நிச்சயம்...”

“ஹஹ்ஹஹ்ஹா!”

“ஏன் சிரிக்கிறாய்?”

“ஒரு காடு வாழ் மனிதனாக என்னிடம் இருப்பதெல்லாம் எளிய ஆயுதங்கள். நாடு நாடாய்ச் சுற்றி வந்த நீர் சக்ராயுதம் போன்ற நவீன ஆயுதங்களால் எம்மை எளிதில் வீழ்த்தி விடுவீர் என்பது எனக்குத் தெரியும். அதிலே நீங்கள் பெருமைப்பட ஏதுமில்லை. ஆனால் ஒன்று, உங்களால் என்னை அழித்துவிட முடியாது...”

“என்ன சொல்கிறாய்?”

“என்னைக் கொன்று காட்டைக் கைப்பற்றி யதை உங்கள் மக்கள் கொண்டாடுவார்கள். ஆனால், என் மக்களும் நான் அவர்களுக்காகப் போராடி வீழ்ந்ததைக் கொண்டாடுவார்கள். அவர்களிடம் சொல்லியிருக்கிறேன்... என் சாவில் யாரும் துயரம் கொள்ளக்கூடாது என்று. எதற்காக நான் சாவைத் தழுவினேன் என்பதை தலைமுறை தலைமுறையாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கூறியிருக் கிறேன். என்றாவது ஒரு நாள் எம் மக்கள் வெல் வார்கள். உங்களிடமிருந்து கானகத்தை மீட் பார்கள்.”

ஈவிரக்கமற்ற கொடூரமான அசுரன் என்று புராணத்தில் சித்தரிக்கப்பட்ட நரகன் சக்ரா யுதத்தால் கழுத்தறுபட்டு மாண்டான்.

அரண்மனையில் ஆக்கிரமிக்க வந்தவர் களின் அரசன், சக்ராயுதம் சுழற்றி உதவியவன், வழிகாட்டும் குருமார்கள், அமைச்சர்கள் எல் லோருமாய்க் கூடியிருக்கிறார்கள். “நரகாசுரன் சொன்னது போலவே அவனுடைய மக்கள் அவனுடைய சாவைக் கொண்டாடுகிறார்கள், அவன் மாண்டது ஏன் என்று சொல்லிச் சொல் லிக் கொண்டாடுகிறார்கள். என்ன செய்வது?”

“அவன் கொல்லப்பட வேண்டிய பாவி, தேவர்களை வதைத்த கருணையற்ற அரக்கன் என்பதாகப் பரப்புங்கள். சாபத்தால் அரக்க னாய்ப் பிறந்தான் என்று கதை கூறுங்கள். சாப விமோசனம் கண்ணனின் சக்ராயுதத்தால் கிடைத்தது என்று முடியுங்கள். மரணத் தறு வாயில் அவன் வைத்த கோரிக்கையை இறை வன் ஏற்றுக்கொண்டதால், அதன்படி மக்கள் நரகாசுரனின் இறப்பை, தீப ஒளி நாளாகக் கொண்டாடுகிறார்கள் என்று புதிய புராணம் எழுதுங்கள். நெருப்பின் பயனை மனிதர்கள் கண்டுபிடித்ததன் நினைவாகத் தொடர்கிற தீப விழாவையும் நரகன் கொலையையும் இணை யுங்கள்...”

“மக்கள் அதை நம்ப வேண்டுமே?”

“ஏன் நம்ப மாட்டார்கள்? புராணக் கதை யாக மாற்றி நம் ஊடகங்கள் வாயிலாக திரும் பத் திரும்பச் சொல்லுங்கள். ”

“ஊடகங்களா...?”

“கதாகாலட்சேபங்கள், நாடகங்கள், நாட் டியங்கள், ஆலயச் சுவர் ஓவியங்கள், சிற்பங் கள்... இவற்றின் மூலமாகப் பரப்புங்கள். நடந் ததை நேரில் பார்க்காத சனங்கள் நாம் சொல் வதை விரைவிலேயே நம்பிவிடுவார்கள். நவீன ஊடக வசதி எதுவும் இல்லாத வீழ்த்தப்பட்ட வர்கள் இப்படியெல்லாம் பரப்ப முடியாது. அப்படியே அவர்கள் நடந்தது என்னவெனக் கூறினாலும், அது தோற்றவர்களின் புலம்ப லாகவும், வரலாறு தெரியாதவர்களின் பிதற்ற லாகவுவும் நம் வாரிசுகளால் திரிக்கப்பட்டு விடும்... வீழ்ந்தவர்களின் வாரிசுகளும் உண்மை தெரியாமலே நம் விழாவைக் கொண்டாடு வார்கள்...”

........

ண்டிகை, கலாச்சார விழா என்று என்ன பெயரிட்டாலும் இப்படிப்பட்ட பின்னணி களும் இருக்கின்றன. எனினும், மனிதர்கள் கூறு போடப்பட்டதைக் கொண்டாடுகிற இதே விழாக்கள் இன்று மனிதர்களை இணைக்கிற வேலையையும் செய்கின்றன. கூறப்படும் கதைகளில் நம்பிக்கை உள்ளவர் கள் கொண்டாடுகிறார்கள். நம்பிக்கை இல் லாதவர்கள் பண்பாடு கருதி இந்தக் கொண் டாட்டங்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறார் கள். தீபாவளி பிடிக்காவிட்டாலும் தீபாவளி இனிப்புகளையும் பலகாரங்களையும் ஏன் மறுக்க வேண்டும்?

விழாக்கள் ஒரு வகையில் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்பார்ப்புகள் எந்த அளவுக்கு எட்டப்பட்டன என்பதை மதிப்பிடும் ஆண்டுக் கணக்கெடுப்பாகவும் உதவுகின்றன. புத்தாடைகள், புதிய வாகனங்கள், புதிய பொருள்கள் என வாங்க வைத்து, வர்த்தக சுழற் சிக்கு வழி வகுத்து, பொருளாதாரத் தேக்கத்தை ஓரளவேனும் உடைக்கப் பயன்படுகின்றன.

பகுத்தறிவாளர்கள் என்றால் இதிலேயெல் லாம் பட்டுக்கொள்ளாமல் பரிசுத்தம் பேணு கிறவர்கள் அல்ல. மக்களோடு சேர்ந்து நின்று, சக மனிதர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவர்களாகி, உண்மை வரலாற்றையும் அழுத்தமாகக் கூறுகிற நுட்பம் கைவரப் பெற்றவர்களே முற்போக்காளர்கள்.

நண்பர் ஒருவர் விமர்சித்தார்: “இந்து மதத்தின் கதைகளைத்தான் உங்களைப் போன்ற வர்கள் தாக்குகிறீர்கள். மற்ற மதங்களை நீங்கள் கண்டுகொள்வதில்லை... அச்சமும் அவர்களது வாக்கு வங்கியும்தானே காரணம்?”

வாக்கு வங்கிதான் நோக்கம் என்றால் பெரும் பான்மை மதத்தினரோடு சமரசம் செய்து கொள்வதுதானே புத்திசாலித்தனமான உத்தி யாக இருக்கும்? அதற்கு இடதுசாரிகளும் இதர முற்போக்காளர்களும் தயாராக இல்லை என்பதை ஏனோ இவர்கள் புரிந்துகொள்வ தில்லை.
பிறந்து வளர்ந்த குடும்பச் சூழல் காரண மாக எந்த நம்பிக்கைகள் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ள முடிந்ததோ அந்த நம்பிக்கைகளை விசாரணைக்கு உட்படுத்துகிறார்கள் முற் போக்காளர்கள். இஸ்லாமிய மதமும், கிறிஸ்துவமும் பெரும்பான்மை மதங்களாக உள்ள நாடுகளின் பகுத்தறிவாளர்கள் அங்குள்ள பிற்போக்குத் தனங்களை எதிர்த்துக்கொண்டு தான் இருப்பார்கள். அவர்களிடம் போய் “நீங்கள் ஏன் இந்து மத நம்பிக்கைகளைச் சாடுவதில்லை,” என்று கேட்பதில் பொருளில்லை. அப்படித்தான் இங்கேயும்.

அதே வேளையில், சிறுபான்மை மத அமைப்புகளில் நடக்கிற மனித உரிமை மீறல் கள், சாதியப் பாகுபாடுகள், பெண்ணடி மைத்தனங்கள் போன்றவற்றை எதிர்த்து இங்குள்ள முற்போக்குச் சிந்தனையாளர்கள் குரல்கொடுக்கவே செய்கிறார்கள். அதற்காக அந்த சிறுபான்மை மதவாதிகளின் தாக்குதல் களுக்கும் உள்ளாகிறார்கள்.

............

காடு பிடிக்க நரகர்களை அழிக்கிற வேலை இன்று வேறு சக்திகளால், வேறு நோக்கங் களுடன், வேறு வடிவங்களில் நடத்தப்படு கிறது. தொழில் வளர்ச்சி என்ற போர்வையில் வனங்களின் கனிம வளங்களைச் சூறையாடுவ தற்கும், நிலங்களை வளைப்பதற்கும் உள் நாட்டு - பன்னாட்டுப் பெரு நிறுவனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. வனமன்றி மண்ணில் வேறெதுவும் அறியாமல் வளர்ந்துவிட்ட, வனங்களின் பிள்ளைகளான பழங்குடியினருக்கு ஆசை காட்டப்படுகிறது. அதில் ஏமாறாதவர்களுக்கு அச்சம் ஊட்டப்படுகிறது. அதற்கும் பணியாவிட்டால் அடக்குமுறை ஏவப்படுகிறது. வன மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு, அவர் களது நிலங்களைச் சிக்கலில்லாமல் கார்ப் பரேட் முதலாளிகளுக்குக் கிடைக்கச் செய்வ தற்கான சட்டத் திருத்தங்கள் மனசாட்சியின்றி நிறைவேற்றப்படுகின்றன. தேவைப்பட்டால் வனங்களுக்குள் காவல்படைகள் குண்டாந் தடிகளோடும் துப்பாக்கிகளோடும் அனுப்பப் படுகின்றன. அந்த மக்களுக்காக வாதாடுவோர் மீது தீவிரவாதி, பயங்கரவாதி என்றெல்லாம் அசுர முத்திரை குத்தப்படுகிறது. நவீன சக்ராயுதங்களால் “என்கவுன்டர்” நடத்தப்படுகிறது.

செய்தியோடு செய்தி என்று விட்டுவிட் டால் இந்த ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் இன் றைய கார்ப்பரேட் ஊடகங்களால் புதிய புரா ணங்களாக்கப்பட்டுவிடும். ஆயினும், அன் றைய நரகனுக்கு இல்லாமல் போன சில வாய்ப்பு கள் இன்றைய நரகன்களுங்ககு இருக்கின்றன: மக்களின் விழிப்புணர்வு, இடதுசாரி-முற் போக்கு இயக்கங்கள், அக்கறையுள்ள மக்கள் ஊடகங்கள்... ஆகியவையே அந்த வாய்ப்புகள்.

No comments: