Sunday 30 December 2007

புத்தாண்டு வாழ்த்துதான்...

எல்லா வளமும் பெற்று
இன்புற்று வாழ்ந்திட
கடக்கும் ஆண்டின்
தொடக்கத்தில் வாழ்த்தியது
நினைவுக்கு வருகிறது.
கணக்கெடுப்பில் மனம்
கசந்து தொய்கிறது.
உன் கர்ப்பத்தில் நீ
என்ன வைத்திருக்கிறாய்
புத்தாண்டே?
புதிர்கள் நிமிடங்களுக்கு
புத்துணர்ச்சியூட்ட
உன் ஒரு வல்லமையை
மறுப்பதற்கில்லை.
நம்பிக்கையை விதைக்கும்
அந்த வல்லமை.
வாழ்த்துவோருக்கும்
வாழ்த்தப்படுவோருக்கும்
நம்பிக்கை.

-அ.குமரேசன்

No comments: