Friday 26 October 2007


நாடகக் களம்

காலக்கனவு

ரலாறு எத்தனையோ அடக்குமுறைகளைத் தன்னுள் பதிந்து வந்திருக்கிறது. அவற்றில் மிக மோசமான அடக்குமுறை பெண்களை ஆணுக்கு சுகமும் சோறும் தருகிற எந்திரங்களாக ஆக்கியதுதான். இதன் இன்னொரு பக்கமாக, பெண்களின் வரலாற்றுப் பங்களிப்பும் அடக்கப் பட்டது. வரலாற்று நாயகன்கள் மட்டுமே போற்றப்படுகிறார்கள். நாயகிகள் போற்றப்படுவதில்லை.

வரலாறு, அடக்குமுறைகளுக்கு எதிரான எழுச்சிகளை யும் தன்னுள் பதிந்து வந்திருக்கிறது. பெண்ணுரிமை இயக் கம் அப்படிப்பட்ட எழுச்சி வரலாறுதான். மறைக்கப்பட்ட அல்லது பெரிதும் நினைவுகூரப்படாத அந்த வரலாற்றின் சில பக்கங்களைப் புரட்டிப்பார்க்கிறது, ‘மரப்பாச்சி’ குழுவி னரின் புதிய “காலக்கனவு” ஆவண நாடகம். “பெண்ணிய நோக்கில் நமது நவீன கால வரலாற்றை ஆராயும் ஒரு முயற்சி. முக்கியமான வரலாற்றுத் தருணங்களையும் நிகழ்வு களையும் பெண்கள் எவ்வாறு உணர்ந்தார்கள், அத்தகைய உணர்தலானது அவர்களை எவ்விதத்தில் பாதித்தது என் பதை அவர்களின் வார்த்தைகளினூடாக அரங்கேற்றும் ஒரு நிகழ்வு இது,” என்று அறிமுகக் குறிப்பில் கூறப்பட்டிருக் கிறது. பெண்விடுதலைச் சிந்தனைகள் பளிச்செனத் தெரி யும் பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான வரலாற்றுச் சங்கிலியின் கண்ணிகள் இதில் கோர்க்கப்பட்டுள்ளன.

பாரதிக்கும் முன்பே, பெண்விடுதலைக் குரல் பெண் களிடமிருந்து ஒலிக்கத் தொடங்கிவிட்டதைக் கூறுவதிலி ருந்து நாடகம் தொடங்குகிறது. ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் மேல்சாதிப் பெண்களைப் போல் ஆடை அணிவதற்காக நடத்திய போராட்டம், ஒதுக்கப்பட்ட பெண் களுக்கு கிறி°துவம் தந்த தன்னம்பிக்கை, தேவதாசி முறையிலிருந்து பெண்கள் மீட்கப்பட்டது... என அன்றைய நிகழ்வுகள் நினைவூட்டப்படுகின்றன. பெண்ணின் சுய அடையாளத்திற்காக எழுந்து நின்ற மூதலூர் ராமாமிருதம் வெளிப்படுத்திய துணிச்சலான கருத்துக்கள், பெண் கல்விக்காகப் போராடிய முத்துலட்சுமி, இஸ்லாமிய மதத்திற் குள் பெண்ணின் இடத்திற்காக எழுதிய சித்தி ஜூனைதா பேகம் என்று பலப்பல தகவல்கள் வருகின்றன. பெரியாரின் இயக்கம் தொடங்கியதும் இந்தப் பெண்களுக்கு ஒரு வலுவான தளம் கிடைக்கிறது. “வைதீகமாக இருந்த திருமணத்தை சமுக ஒப்பந்தமாக்கியது சுயமரியாதை இயக்கம்,” என்ற கருத்து பதிவு செய்யப்படுகிறது.

“வரலாற்றின் தொடர்ச்சி எப்படி அறுபட்டது,” என கேள்வி எழுப்பும் இந்த நாடகம், அறுபட்ட அத்தியாயங்களை தேடிப்படிக்கத் தூண்டுவதில் பெரும் வெற்றி பெறு கிறது. பெண்ணடிமைத் தனத்தை ஏதோ ஒரு வகையில் அனுமதித்துக் கொண்டிருக்கும் ஆண்களின் மனசாட்சி யில் காத்திரமான உறுத்தலை ஏற்படுத்துகிறது. இதை மாற்றியே தீர்வது என்று களம் இறங்குவோர் நெஞ்சங்களில் மகத்தான மரபு பற்றிய பெருமிதத்தையும், அதன் தொடர்ச்சி பற்றிய நம்பிக்கையையும் விதைக்கிறது.

“இடதுசாரி செயல்பாடுகளும், சுயமரியாதை இயக்கமும் பெண்களுக்கு உருவாக்கியளித்த வெளிகள், வாய்ப்பு கள்...” என அறிமுகத்தின்போது சொல்லப்படுகிறது. ஆனால், இடதுசாரி சிந்தனைகளோடு தங்களைப் பிணைத் துக் கொண்ட பெண் போராளிகள் பற்றி மேலோட்டமாக, அவர்களது பெயர் மட்டுமே சொல்லப்படுகிறது. விடுதலைப் போராட்ட காலத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் என்பதால் நாடக நடிகர் விஸ்வநாத தாஸ் மற்ற நடிகைகளால் புறக்கணிக்கப்பட்டபோது, ஊருக்கு அஞ்சாமல் அவரோடு சேர்ந்து மேடை ஏறி நடித்த கே.பி.ஜானகி அம்மாள் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவம் கூடவா சொல்வதற்குக் கிடைக்கவில்லை? சிறையில் அடைக்கப்பட்ட லட்சுமி அம்மாள் தன் மகளின் முகத்தை கூட காண முடியாதவராக செத்துப்போய், புதைத்தார்களா, எரித்தார்களா என்பது கூட தெரியாமல் உடல் மறைக்கப்பட்டதே - அவரது போராட்டத்திலிருந்து சின்னக் குறிப்பு கூடவா கூறமுடியவில்லை?

“இடதுசாரிகள் இதில் பெரிய அளவுக்கு எதுவும் செய்துவிட வில்லை,” என்று ஒரு விமர்சனம் வேறு போகிற போக்கில் வீசப்படுகிறது. வெள்ளையர் ஆட்சிக் காலத்திலும், சுதந்திர இந்தியாவின் தொடக்கக் கட்டத்திலும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தலைமறைவு இயக்கம் நடத்த வேண்டிய கட்டாயச் சூழல் நிலவியது. வர்க்கப் போராட்டம் என்ற அடிப்படையான போராட்டத்தைக் கையில் எடுத்ததால் ஆளும் வர்க்கம் உருவாக்கிய நிலைமை அது. அந்தச் சூழலில், நாடகத்தில் குறிப்பிடப்படும் மற்ற பெண்களைப் போல் இடதுசாரி இயக்கத்தினரின் குரல் ஓங்கி ஒலிக்க முடியாமல் இருந்தது. மேலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பொறுத்தவரையில் பாலின வேறுபாடின்றி தோழர்களின் கருத்துக்கள் இயக்கத்தின் நிலைபாடாகவே வெளிப்படு கின்றன. தனி நபர் சிந்தனையாக அடையாளம் பெறுவ தில்லை. அவ்வகையில் கம்யூனிஸ்ட் பெண்களின் வார்த்தைகள் இயக்கத்தின் குரலாக ஒலித்தே வந்துள்ளன. இன்று வரையில் சாதிக்க முடிந்துள்ள பெண்களின் உரிமை சார்ந்த சட்டங்களும் திட்டங்களும் இல்லாமல் வந்துவிட வில்லை. இந்த இயக்கமுறையைப் புரிந்து கொள்ளாமல் இடதுசாரிகள் பெரிதாக எதுவும் செய்துவிட வில்லை என்று எளிதாகத் தூக்கி எறிவது சில அறிவு ஜீவிகளுக்கு எளிதாகக் இருக்கிறது.

ஆயினும் இடதுசாரி இயக்கப் பெண்கள் பற்றி கவிஞர் இன்குலாப் வழங்கியுள்ள பாடல் கம்பீரமாய்க் காற்றில் பரவு கிறது.

நாடக வடிவம் குறிப்பிட வேண்டிய ஒன்று. துவக்கம், உச்சம், முடிவு என்ற கதை வடிவத்தில் அல்லாமல், நாட் குறிப்புகள், பத்திரிகைகள், புத்தகங்கள் போன்றவற்றி லிருந்து எடுத்த தகவல்களை நயம் கலந்து வழங்கியிருக் கிறார் வ.கீதா.

மேடை நிகழ்வாகவும் இல்லாமல், வட்டக் களமாகவும் இல்லாமல், தரையில் மையத்திலிருந்து மூன்று திசைகளுக்கு விரிக்கப்பட்டிருக்கும் நீளமான மூன்று பாய்கள்தான் நடிப்புக் களம்! அந்தப் பாய்களில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே நடிப்பாளர்கள் தகவல்களைப் பரிமாறியது முற்றிலும் புதிய அனுபவம். சில தகவல்களை அச்சிடப்பட்ட அட்டைகளாக அரங்கச் சுவர்களில் அவ்வப்போது நடிப்பாளர்கள் தொங்கவிட்டது ஒரு வரலாற்று வகுப்பறை உணர்வை ஏற்படுத்தியது.

பாய்களின் இடைவெளியில் பார்வையாளர்கள் அமர முடிகிறது. நாடகத்தின் செய்தி அவர்களோடு நெருக்கமாக இணைவதை உறுதிப் படுத்துகிறது பேராசிரியர் மங்கையின் நெறியாள்கை.

பொன்னி, கல்பனா, ரேவதி, கவின்மலர் ஆகிய நான்கே பேர்தான் நடிப்பாளர்கள். சரியான குரல் பயிற்சியுடன், தேவையான உடல் மொழியுடன் அவர்கள் நாடகத்தின் உள்ளடக்கத்தை உருவகப்படுத்துகிறார்கள். ஆங்காங்கே பார்வையாளர்களின் பங்கேற்புக்கும் வழியமைக்கப்பட்டிருக் கிறது.

முழுமையான பாலின சமத்துவம் என்ற கனவு நன வாகிற காலம் வரும். பெண்ணியக் கண்ணோட்டத்தில் மட்டுமன்றி, சமுதாயக் கண்ணோட்டத்திலும் அதனை நிறைவேற்றப் புறப்பட்டவர்களுக்குத் தோள்தரும் படைப்புகளில் ஒன்றாக இதனை வழங்கியிருக்கிற இவர்கள் வர லாற்றின் வாழ்த்துக்குரியவர்கள்.

-அ. குமரேசன்

No comments: