Saturday 23 June 2007

vivaadham

நடுநிலை மோசடி
சிலருக்குத் தங்களது சாதியின் பெயரைத் தங்களது பெயரின் பின்னால் ஒட்டவைத்துக் கொள்வதில் மோகம் (சாதிய எதிர்ப்பின் அடையாளமாக பறையன் பறையனார் பள்ளர் என்றெல்லாம் பெயருக்குப் பின் இணைத்துக் கொள்வதை இங்கு நான் குறிப்பிடவில்லை). சிலருக்கு தங்களது பெயருடன் யாரோ ஒரு சினிமா நடிகரின் பெயரை ஒட்டவைத்துக் கொள்வதில் மோகம். இப்படியாக பலப்பல மோகங்கள்.
நம்மூர் ஊடகங்களுக்கு தங்களை *நடுநிலை* என்று சொல்லிக் கொள்வதில் மோகம். அதை மோகம் என்று சொல்லலாமா என்பது கூட எனக்குத் தெரியவில்லை. வட்டார நடுநிலை ஏடுகள் முதல் தேசிய நடுநிலை ஏடுகள் வரை இருக்கின்றன.
உண்மை என்னவென்றால் எந்த ஒரு ஊடகமும் நடுநிலையாக இல்லை. எந்த ஒரு ஊடகமும் நடுநிலையாக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை.
கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை- வேறு சில கட்சிகளின் பத்திரிகைகள்- சில இயக்கங்களின் பத்திரிகைகள் தங்களை அவ்வாறு கூறிக்கொள்வதில்லை. நாங்கள் தொழிலாளி வர்க்கப் பத்திரிகை- வர்க்கச் சார்புள்ள பத்திரிகை என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டே செயல்படுகின்றன.
மற்ற ஊடகங்கள் நடுநிலை எனக் கூறிக் கொண்டு அததற்கென ஒரு அரசியலைக் கடைப்பிடிக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக வர்க்க அரசியலில் - ஆளும் வர்க்க நலன் சார்ந்தே செயல்படுகின்றன.
இது பற்றி இனி தொடர்ந்து பேசுவோம். நிறையப் பேச வேண்டியிருக்கிறது. -அ.குமரேசன்

No comments: