Friday 29 June 2007

கவிதை

மறுபடி வந்தார்
நாதர் ஏசு.
கை நீட்டினார்
ஒரு கை ரேகை
ஜோசிய மாமணியிடம்.
‘‘சுகபோக வாழ்க்கை
ஐயா உமக்கு!
உம்மை யாரும்
இதுவரை அடித்ததில்லை
இனி அடிக்கப்போவதுமில்லை
-உமது உள்ளங்கை ரேகை
மிக அழுத்தமாய்
காட்டுது ஜோராய்!’’
-என்று சொன்னஜோசியன்
காட்டியஉள்ளங்கை இடத்தில்
ஆழமாய் இருந்தது
ஆணி அடித்த வடு.

-அ.குமரேசன்

No comments: